தோழர் புஸ்பராசாவை நினைவு கூரூகிறோம்
தோழர் புஸ்பராசா அவர்கள் மறைந்து 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவர் தனது 55 வது வயதில் 10.03.2006 இவ் உலகைவிட்டுப் பிரிந்தார்.
தனது மரணத்தின் நாள் முன் கூட்டியே சிலநாட்களுக்கு முன் அவருக்கு தெரிந்திருந்தது. ‘வெடி மருந்து வீச்சமில்லாத தாயகத்தின் தெருவில் தனது பிள்ளைகள் உலாவும் காலம் வரவேண்டும்’ என்று அவர் கனவு கண்டார்.
மாணவர் -இளைஞர் பேரவைகளினூடாக தமிழ் தேசிய அரசியலில் பிரவேசித்த புஸ்பராசாவும் அவர் சகோதரி புஸ்பராணியும் 1970களின் முற்பகுதியில் வதைமுகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் .
இலங்கைத் தமிழர் வரலாற்றில் அரசியல் காரணங்களுக்காக சித்திரவதை செய்தல் கொலை செய்தல் ஆரம்பமான காலம் இது.
சிங்கள இளைஞர்கள் மீது சமகாலத்திலேயே சித்திரவதைகள் ஆரம்பித்திருந்தன.
ஆரம்பத்தில் அஹிம்சை சத்தியாக்கிரக இயக்கங்களில் பங்கு பற்றிய, முன்நின்று நடத்திய புஸ்பராசா அன்றைய ஈழத்தமிழ் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
பின்னர் 1970களின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலை இயக்கத்தை உருவாக்கியவர்களில் (தற்போதைய ரெலோ அல்ல) புஸபராசாவும் ஒருவர். தோழர் வரதராஜப்பெருமாள் போன்றவர்கள் இவரின் சகபாடிகளாக இருந்தனர்.
1974 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளின் பின்னர் தீவிர செயற்பாட்டாளராக மாறியிருந்தார்.
அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் அன்றைய தமிழ் அரசியலின் போதாமை அவருக்கு விரக்தியை ஏற்படுத்தியிருந்தது
1980களின் முற்பகுதியில் அவர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்து சென்றார்.
அதே காலப்பகுதியல் பிரான்சுக்குப் போவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் புஸ்பராசாவும் நானும் குன்சியும் ஒருமத்தியானம் கீரிமலையிலிருந்து புறப்பட்டு மாலை வேதாரணியம் கரையில் இறங்கினோம்.
இரவு வேதாரணியம் சவுக்கந்தோப்பொன்றில் தங்கிவிட்டு மறுநாள் காலை தஞ்சாவூரில் தோழர் புஸ்பராசாவிற்கு அறிமுகமான தந்தை பெரியாரின் கொள்கைகளில் தீவிர் ஈடுபாடு கொண்ட குடும்பம் ஒன்றுடன் தங்கிவிட்டு சென்னை சூளைமேடு வகாப்தெருவிற்கு வந்துசேர்ந்தோம்.
இலங்கை அரச பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்தியா வந்திருந்த சில இளைஞர்களும் அங்கிருந்தார்கள்.
தோழர் பத்மநபா எவிடன்ஸ் (நுஎனைநnஉந) பத்திரிகைக்களித்த பேட்டியில் புஸ்பராசா புஸ்பராணி ஆகியோரின் பங்களிப்பு பற்றிய பந்திகளை காண்பித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் அவர் பிரான்சிற்குச் சென்று விட்டார்.
நீண்டகாலம் அவரை ஒரு தேசியவாதியாக அறிந்திருக்கிறேன்.
1980களின் முற்பகுதியில் அவர் ஈபிஆர்எல்எப் உடன் நெருங்கிச் செயற்பட்டார். பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி வந்த பலருக்கு அவர் உதவியிருக்கிறார்.
காலஞ்சென்ற தோழர் உமாகாந்தன் ,புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம் போன்றவர்களுடன் அவர் நெருக்கமாகச் செயற்பட்டிருக்கிறார்.
1980 களில் அவர் பிரதானமாக தேசியவிடுதலையுடன், தீண்டாமை பெண் அடிமைத்தனம் -விழிம்புநிலை மக்கள் தொடர்பான அக்கறைகளும் அவரின் நிகழ்ச்சி நிரலில் சேர்ந்துகொண்டன.
கட்டுரை, சிறுகதை, கவிதை என அவர் பல ஆக்கங்களை எமுதியிருப்பதாக அறிகிறேன். ஒரு சிலவற்றை அவ்வப்போது வாசித்துமிருக்கிறேன்.
அவரது குடும்ப சூழலில் அவரது மனைவியார் மீரா, சசோதரி புஸ்பராணி ஆகியோரின் பங்களிப்பும்- உறுதுணையும-; அனுபவமும் முக்கியமானவை என அறிகிறேன்.
கடந்த 2 தசாப்தங்களுக்கு மேலாக ஐரோப்பிய வடஅமெரிக்க புலம்பெயர் தளத்தில் நிகழ்ந்து வந்த இலக்கியச் சந்திப்பு, பெண்கள் சந்திப்பு எழுத்துக்கள் பரிமாறல்கள் அவர் மேல் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.
தவிர தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் அடிக்கடி சென்று சமூக இலக்கியப்பிரக்ஞை உள்ள மனிதர்களுடன் அவர் தன்னைப் பரிச்சயப்படுத்தியிருக்கிறார்.
அவர் வெடிமருந்து வீச்சமில்லாத தெருக்களை வேண்டினார். ஆனால் அவர் நேசித்திருக்கக் கூடிய அவரது ஊர் மயிலிட்டி இன்னும் உயர்பாதுகாப்பு வலயமே. சொந்த கிராமம் -அதன் வாழ்வும் வளமும் அழிக்கப்பட்டு விட்டது என்ற வலி இருக்கிறதே அது பயங்கரமானது.
எமது சமூகத்தில் பலரது அனுபவம் போலவே அவரும் உற்ற, சுற்றம,; உறவுகளை இழந்திருக்கிறார்.
‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம’; என்ற அவரது அனுபவத்தொகுப்பு ஈழத்திலும,; தமிழகத்திலும், புலம்பெயர்தளத்திலும் நன்கு அறியப்பட்டது.
இப்போது அவரது ஆக்கங்கள் சிலவற்றை பிரசுரிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக அறியப்படுகிறது.
தமிழ் தேசிய சமூக இயக்க வரலாற்றில் தோழர் புஸ்பராசா அவர்களுக்கும் குறிப்பிடத்தகுந்த இடமுண்டு. அவரின் கனவான வன்முறை ஒழிந்த சுதந்திரமுழ் சமத்துவமும் சமாதானமும் நிலவும் வாழ்வு மெய்ப்படவேண்டும்.
தனது மரணத்தின் நாள் முன் கூட்டியே சிலநாட்களுக்கு முன் அவருக்கு தெரிந்திருந்தது. ‘வெடி மருந்து வீச்சமில்லாத தாயகத்தின் தெருவில் தனது பிள்ளைகள் உலாவும் காலம் வரவேண்டும்’ என்று அவர் கனவு கண்டார்.
மாணவர் -இளைஞர் பேரவைகளினூடாக தமிழ் தேசிய அரசியலில் பிரவேசித்த புஸ்பராசாவும் அவர் சகோதரி புஸ்பராணியும் 1970களின் முற்பகுதியில் வதைமுகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் .
இலங்கைத் தமிழர் வரலாற்றில் அரசியல் காரணங்களுக்காக சித்திரவதை செய்தல் கொலை செய்தல் ஆரம்பமான காலம் இது.
சிங்கள இளைஞர்கள் மீது சமகாலத்திலேயே சித்திரவதைகள் ஆரம்பித்திருந்தன.
ஆரம்பத்தில் அஹிம்சை சத்தியாக்கிரக இயக்கங்களில் பங்கு பற்றிய, முன்நின்று நடத்திய புஸ்பராசா அன்றைய ஈழத்தமிழ் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
பின்னர் 1970களின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலை இயக்கத்தை உருவாக்கியவர்களில் (தற்போதைய ரெலோ அல்ல) புஸபராசாவும் ஒருவர். தோழர் வரதராஜப்பெருமாள் போன்றவர்கள் இவரின் சகபாடிகளாக இருந்தனர்.
1974 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளின் பின்னர் தீவிர செயற்பாட்டாளராக மாறியிருந்தார்.
அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் அன்றைய தமிழ் அரசியலின் போதாமை அவருக்கு விரக்தியை ஏற்படுத்தியிருந்தது
1980களின் முற்பகுதியில் அவர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்து சென்றார்.
அதே காலப்பகுதியல் பிரான்சுக்குப் போவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் புஸ்பராசாவும் நானும் குன்சியும் ஒருமத்தியானம் கீரிமலையிலிருந்து புறப்பட்டு மாலை வேதாரணியம் கரையில் இறங்கினோம்.
இரவு வேதாரணியம் சவுக்கந்தோப்பொன்றில் தங்கிவிட்டு மறுநாள் காலை தஞ்சாவூரில் தோழர் புஸ்பராசாவிற்கு அறிமுகமான தந்தை பெரியாரின் கொள்கைகளில் தீவிர் ஈடுபாடு கொண்ட குடும்பம் ஒன்றுடன் தங்கிவிட்டு சென்னை சூளைமேடு வகாப்தெருவிற்கு வந்துசேர்ந்தோம்.
இலங்கை அரச பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்தியா வந்திருந்த சில இளைஞர்களும் அங்கிருந்தார்கள்.
தோழர் பத்மநபா எவிடன்ஸ் (நுஎனைநnஉந) பத்திரிகைக்களித்த பேட்டியில் புஸ்பராசா புஸ்பராணி ஆகியோரின் பங்களிப்பு பற்றிய பந்திகளை காண்பித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் அவர் பிரான்சிற்குச் சென்று விட்டார்.
நீண்டகாலம் அவரை ஒரு தேசியவாதியாக அறிந்திருக்கிறேன்.
1980களின் முற்பகுதியில் அவர் ஈபிஆர்எல்எப் உடன் நெருங்கிச் செயற்பட்டார். பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி வந்த பலருக்கு அவர் உதவியிருக்கிறார்.
காலஞ்சென்ற தோழர் உமாகாந்தன் ,புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம் போன்றவர்களுடன் அவர் நெருக்கமாகச் செயற்பட்டிருக்கிறார்.
1980 களில் அவர் பிரதானமாக தேசியவிடுதலையுடன், தீண்டாமை பெண் அடிமைத்தனம் -விழிம்புநிலை மக்கள் தொடர்பான அக்கறைகளும் அவரின் நிகழ்ச்சி நிரலில் சேர்ந்துகொண்டன.
கட்டுரை, சிறுகதை, கவிதை என அவர் பல ஆக்கங்களை எமுதியிருப்பதாக அறிகிறேன். ஒரு சிலவற்றை அவ்வப்போது வாசித்துமிருக்கிறேன்.
அவரது குடும்ப சூழலில் அவரது மனைவியார் மீரா, சசோதரி புஸ்பராணி ஆகியோரின் பங்களிப்பும்- உறுதுணையும-; அனுபவமும் முக்கியமானவை என அறிகிறேன்.
கடந்த 2 தசாப்தங்களுக்கு மேலாக ஐரோப்பிய வடஅமெரிக்க புலம்பெயர் தளத்தில் நிகழ்ந்து வந்த இலக்கியச் சந்திப்பு, பெண்கள் சந்திப்பு எழுத்துக்கள் பரிமாறல்கள் அவர் மேல் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.
தவிர தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் அடிக்கடி சென்று சமூக இலக்கியப்பிரக்ஞை உள்ள மனிதர்களுடன் அவர் தன்னைப் பரிச்சயப்படுத்தியிருக்கிறார்.
அவர் வெடிமருந்து வீச்சமில்லாத தெருக்களை வேண்டினார். ஆனால் அவர் நேசித்திருக்கக் கூடிய அவரது ஊர் மயிலிட்டி இன்னும் உயர்பாதுகாப்பு வலயமே. சொந்த கிராமம் -அதன் வாழ்வும் வளமும் அழிக்கப்பட்டு விட்டது என்ற வலி இருக்கிறதே அது பயங்கரமானது.
எமது சமூகத்தில் பலரது அனுபவம் போலவே அவரும் உற்ற, சுற்றம,; உறவுகளை இழந்திருக்கிறார்.
‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம’; என்ற அவரது அனுபவத்தொகுப்பு ஈழத்திலும,; தமிழகத்திலும், புலம்பெயர்தளத்திலும் நன்கு அறியப்பட்டது.
இப்போது அவரது ஆக்கங்கள் சிலவற்றை பிரசுரிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக அறியப்படுகிறது.
தமிழ் தேசிய சமூக இயக்க வரலாற்றில் தோழர் புஸ்பராசா அவர்களுக்கும் குறிப்பிடத்தகுந்த இடமுண்டு. அவரின் கனவான வன்முறை ஒழிந்த சுதந்திரமுழ் சமத்துவமும் சமாதானமும் நிலவும் வாழ்வு மெய்ப்படவேண்டும்.
No comments:
Post a Comment