பழி இல்லாத நற்பண்புடைய மக்களை ஒருவன் பெற்றிருந்தால் அவனை ஏழு பிறவிகளிலும் துன்பங்கள் தீண்டாது !
தம் மக்களே நம்முடைய பொருட்கள் எனபர். மக்களாகிய அவர் தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும் !
தம் குழந்தைகளின் மழலைச்சொற்களைக் கேட்டு இன்புறாத குழல் ஓசையும், வீணை இசையும் இனியது என்பர்.
தம்மை விடத்தம் மக்கள் அறிவுடையவர்களாகத் திகழ்வது உலகத்து மக்கட் சமுதாயத்திற்கு அதிக நன்மை செய்து மகிழ்விப்பதாகும்.
தன் மகன் நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்வதைக் கேட்டதால் அவனைப் பெற்ற காலத்து எய்திய மகிழ்ச்சியை விடப் பெரியதாகும்.
மகன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறாவது இவனைப்பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லே ஆகும்.
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செயதலாகும் !
தம் குழந்தைகளின் சிறு தளிர்க்கைகளால் பிசைந்த உணவானது பெற்றோர்க்கு அமுதத்தை விட மிக இனிமை தருவதாகும் !
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செயதலாகும் !
















No comments:
Post a Comment